சமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்

0
1086
மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே போல, சமையல் கலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், நாம் சாப்பிடும் சாப்பாடு, பசிக்கு மருந்தாகவும், வாய்க்கு ருசியாகவும் இருக்க வேண்டும். ஆனால், சமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும் உள்ளன. அது என்ன என்று பார்ப்போம்… செய்யக் கூடாதவை!:
*
ரசம் அதிகமாக கொதிக்க கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது.

* தேங்காய்ப் பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாகக் கொதிக்க கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.

* கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக் கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.

* பிரிட்ஜில் வாழைப் பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. செய்ய வேண்டியவை!: * வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும். * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும். * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும். http://pettagum.blogspot.in/2013/03/blog-post_9670.html

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

முரட்டு கதைகள்:  செல்லமே - 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here